மரக்கிளைகள் சாலையில் விழுந்ததால் போக்குவரத்து பாதிப்பு

திருச்சி மாவட்டம், லால்குடி அருகே தாளக்குடி பகுதியில் செவ்வாய்க் கிழமை மரக் கிளைகள் முறிந்து விழுந்ததால் சுமார் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.


திருச்சி மாவட்டம், லால்குடி அருகே தாளக்குடி பகுதியில் செவ்வாய்க் கிழமை மரக் கிளைகள் முறிந்து விழுந்ததால் சுமார் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
தாளக்குடி பகுதியில், செவ்வாய்க்கிழமை காலை சாலையோரம் இருந்த  புளிய மரம் மற்றும் நாவல் மரக்கிளைகள் திடீரென முறிந்து சாலையின் நடுவே விழுந்தது. இதனால் மின் கம்பிகள் அறுந்து விழுந்தன.
மேலும், திருச்சி சிதம்பரம் சாலையில் 1 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதேபோல், சமயபுரம் நெ.1 டோல்கேட், தாளக்குடி, அகிலாண்டபுரம், முத்தமிழ்நகர் போன்ற பகுதிகளில் மின்சாரம் தடைபட்டது. தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த மின் வாரிய ஊழியர்கள், சமயபுரம் போக்குவரத்து போலீஸார் மற்றும் ஸ்ரீரங்கம் தீயணைப்பு படை வீரர்கள்,  கொள்ளிடம் போலீஸார் ஆகியோர் பொக்லைன் இயந்திரம் கொண்டு சாலையில் கிடந்த மரங்களை அப்புறப்படுத்தினர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com