இளைஞர் தூக்கிட்டுத் தற்கொலை

ஸ்ரீரங்கத்தில் இளைஞர் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டார். 


ஸ்ரீரங்கத்தில் இளைஞர் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டார். 
திருச்சி மேலசிந்தாமணி பகுதியைச் சேர்ந்த கருணாகரன் மகன் திவாகர் (22).  இவர், ஊர் சுற்றிவந்துள்ளார். மேலும் குடிப் பழக்கத்திற்கு அடிமையானதாகவும் கூறப்படுகிறது. இந்நிலையில், செவ்வாய்க்கிழமை மாலை திருவானைக்கா மாம்பழச்சாலை பகுதியில் உள்ள சுடுகாட்டிற்கு அருகே வந்து அங்குள்ள மரத்தில் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டார். தகவலறிந்த ஸ்ரீரங்கம் காவல் நிலைய போலீஸார் சம்பவ இடத்துக்கு வந்து சடலத்தை மீட்டு  ஸ்ரீரங்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மனஉளைச்சல் காரணமாக தற்கொலை கொண்டதாக போலீஸார் விசாரணையில் தெரியவந்தது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com