மகன் கண்டித்ததால் விஷம் குடித்து தந்தை தற்கொலை

அடிக்கடி மது அருந்துவதை  மகன் கண்டித்ததால் விரக்தியடைந்த தந்தை விஷம் குடித்து உயிரிழந்தார்.

அடிக்கடி மது அருந்துவதை  மகன் கண்டித்ததால் விரக்தியடைந்த தந்தை விஷம் குடித்து உயிரிழந்தார்.
திருச்சி சங்கிலியாண்டபுரம் ராமமூர்த்தி நகரைச் சேர்ந்தவர்  ரவி(54).  இவரது, மகனுக்கு  மே10ஆம் தேதி திருமணம் நடத்த ஏற்பாடுகள் செய்யப்பட்டு வந்தன.  
இந்நிலையில் அடிக்கடி மது அருந்தி விட்டு பொறுப்பில்லாமல் இருப்பதாக ரவியை அவரது மகன் கண்டித்தாராம். 
இதனால், விரக்தியடைந்த ரவி மதுவில் விஷம் கலந்து குடித்துள்ளார். உறவினர்கள் அவரை மீட்டு திருச்சி அரசு மருத்துவமனையில் ஏப். 19ஆம் தேதி சேர்த்தனர். அங்கு சிகிச்சை பெற்று 
வந்தவர் புதன்கிழமை உயிரிழந்தார். 
இதுதொடர்பாக, பாலக்கரை போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com