திருச்சி அருகே உள்ள வாளாடி பெரியசீலியைச் சேர்ந்தவர் சூர்யநாரயணன்(40). இவர் திருச்சி மத்திய சிறையில் வார்டனாக உள்ளார். திருமணமான இவர் மனைவி உமாவுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் பிரிந்து வாழ்ந்து வருகிறார். கடந்த திங்கள்கிழமை விடுமுறையில் சென்ற சூர்யநாரயணன் புதன்கிழமை பணிக்கு வந்திருக்க வேண்டும். ஆனால் பணிக்கு வரவில்லையாம்.
இதை தொடர்ந்து சிறைத்துறை அதிகாரிகள் அவரது சகோதரர் சியாம்சுந்தரிடம் கேட்டுள்ளனர். அவரது செல்லிடப்பேசியில் தொடர்புக் கொண்ட போது இணைப்பு கிடைக்கவில்லை. இதையடுத்து சியாம்சுந்தர் கொடுத்த புகாரின் பேரில் கே.கே.நகர் போலீஸார் வழக்குப் பதிந்து சூர்யநாரயணனை தேடி வருகின்றனர்.