திருச்சியில் வியாழக்கிழமை ஆட்டோ ஓட்டுநரை கத்தியால் குத்திய இளைஞரை போலீஸார் தேடி வருகின்றனர்.
திருச்சி- மதுரை சாலையில் உள்ள வள்ளுவர் நகரைச் சேர்ந்தவர் சுப்பையன் மகன் சக்திவேல்(32). ஆட்டோ ஓட்டுநரான இவர் திருச்சி பெரியகடைவீதியில் சென்று கொண்டிருந்த போது இருசக்கர வாகனத்தில் வந்த இளைஞர் சக்திவேல் மீது மோத முயன்றுள்ளார். இதனால் இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. இதில்,அந்த இளைஞர் தான் வைத்திருந்த கத்தியால் சக்திவேலை குத்திவிட்டு தப்பியோடிவிட்டார்.
பலத்த காயம் அடைந்த சக்திவேல் திருச்சி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். பிறகு மேல்சிகிச்சைக்காக மதுரை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளார். புகாரின் பேரில் காந்திமார்க்கெட் காவல்நிலைய சார்பு- ஆய்வாளர் கருணாகரன் வழக்குப்பதிவு தலைமறைவான இளைஞரை தேடி வருகின்றார்.