திருச்சி மாவட்டம் மணப்பாறை காவல் உட்கோட்டத்தில் வெள்ளிக்கிழமை வாகனத் தணிக்கை நடைபெற்றது.
திருச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜியாவுல்ஹக் அறிவுறுத்தலின்பேரில் நடைபெற்ற இந்த வாகனத் தணிக்கையில் போக்குவரத்து விதிமீறல் தொடர்பாக 738 வழக்குகள் பதியப்பட்டது.
அதே இடத்தில் அபராதமாக ரூ. ரூ.1,12,400 வசூலிக்கப்பட்டதாக காவல்துறை வட்டாரங்கள் தெரிவித்தன.