இலங்கையில் நடைபெற்ற வெடிகுண்டு சம்பவத்தின் எதிரொலியாக ஸ்ரீரங்கம், திருவானைக்கா கோயில்களில் கூடுதல் பாதுகாப்பு போடப்பட்டு வெடிகுண்டு சோதனைக்குப் பின்னரே பக்தர்கள் அனுமதிக்கப்படுகிறார்கள்.
இலங்கையில் தேவாலயங்களில் அண்மையில் நடைபெற்ற குண்டுவெடிப்பைத் தொடர்ந்து தமிழகத்தில் உள்ள வழிபாட்டுத் தலங்களுக்கு கூடுதலாக பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. அதன்படி ஸ்ரீரங்கம், திருவானைக்கா கோயில்களில் பக்தர்களின் உடைமைகளை வெடிகுண்டு சோதனை கருவி மூலம் சோதனை செய்யப்பட்ட பிறகே கோயில்களுக்கு அனுமதிக்கப்படுகிறார்கள்.