தமிழ்நாடு கொசு ஒழிப்புப் பணியாளர் நல சங்கத்தின் சிறப்புக் கூட்டம் திருவெறும்பூரில் சனிக்கிழமை நடைபெற்றது. கூட்டத்துக்கு மாநில செயலர் தயாளன் தலைமை வகித்தார். சங்கத் தலைவர் அண்ணாதுரை, துணை தலைவர்கள் மணிகண்டன், பிரகாஷ் துணை செயலாளர் குணசேகரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
கூட்டத்தில், ஆண்டுக்கு 6 மாதம், 9 மாதம் என பணி வழங்குவதை மாற்றி ஆண்டு முழுவதும் பணி வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. இந்த கோரிக்கைகளை வலியுறுத்தி மே 2ஆம் தேதி தமிழக முதல்வரை சந்தித்து மனு அளிப்பது என முடிவு எடுக்கப்பட்டது.