தங்கக் கருட வாகனத்தில் நம்பெருமாள்ஸ்ரீரங்கம், ஏப். 28: ஸ்ரீரங்கம் அரங்கநாதர்

சுவாமி திருக்கோயில் சித்திரைத் திருத்தேரோட்ட விழாவின் 4 ஆம் நாளான ஞாயிற்றுக்கிழமை நம்பெருமாள் தங்கக்

சுவாமி திருக்கோயில் சித்திரைத் திருத்தேரோட்ட விழாவின் 4 ஆம் நாளான ஞாயிற்றுக்கிழமை நம்பெருமாள் தங்கக் கருட வாகனத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு சேவை சாதித்தார். 
ஸ்ரீரங்கம் கோயில் சித்திரைத் திருத்தேரோட்ட விழா கடந்த 25 ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. 11 நாள்கள் நடைபெறும் இவ்விழா நாள்களில் நம்பெருமாள் பல்வேறு வாகனங்களில் எழுந்தருளி பக்தர்களுக்கு சேவை சாதிப்பார். இதில் 4 ஆம் நாளான ஞாயிற்றுக்கிழமை மாலை தங்கக் கருட வாகனத்தில் நம்பெருமாள் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சியளித்தார். 
இதற்காக அதிகாலை 3.30 மணிக்கு கண்ணாடி அறையிலிருந்து நம்பெருமாள் புறப்பட்டு வாகன மண்டபத்தை 3.45 மணிக்கு அடைந்தார். 4.30 மணிக்கு அங்கிருந்து இரட்டை பிரபையில் புறப்பட்டு சித்திரை வீதிகளில் வலம் வந்து 6 மணிக்கு மீண்டும் வாகன மண்டபத்தை அடைந்தார். 
பின்னர் 7.15 மணிக்கு பல்லக்கில் மேற்படி மண்டபத்திலிருந்து புறப்பட்டு வழிநடை உபயங்கள் கண்டருளி திருச்சி ஆரிய வைஸ்யாள் ஆஸ்தான மண்டபத்தை பகல் 11.45 மணிக்கு வந்து சேர்ந்தார்.  
தொடர்ந்து மாலை 6 மணிக்கு தங்க கருட வாகனத்தில் மேற்படி மண்டபத்திலிருந்து நம்பெருமாள் புறப்பட்டு சித்திரை வீதிகளில் வலம் வந்தார். அப்போது ஏராளமான பக்தர்கள் தங்க கருட வாகன சேவையை தரிசனம் செய்தனர். இரவு 8.45 மணிக்கு வாகன மண்டபத்தை அடைந்தார். பின்னர் அங்கிருந்து புறப்பட்டு 9.30 மணிக்கு கண்ணாடி அறைக்கு சென்றடைந்தார் நம்பெருமாள். திங்கள்கிழமை காலை சேஷ வாகனத்திலும், மாலை அனுமந்த வாகனத்தில் நம்பெருமாள் எழுந்தருளுகிறார். முக்கிய விழாவான திருத்தேரோட்டம் மே 3 ஆம் தேதி நடைபெறவுள்ளது. விழா ஏற்பாடுகளை கோயில் இணை ஆணையர் பொன்.ஜெயராமன் மற்றும் அறங்காவலர் குழுவினர் செய்து வருகின்றனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com