துறையூர், கோட்டாத்தூரில் குடிநீர் கேட்டு சாலை மறியல்

துறையூர் நகர், கோட்டாத்தூர் கிராமம் ஆகிய இடங்களில், குடிநீர் வழங்கக் கோரி திங்கள்கிழமை அப்பகுதியினர் சாலை மறியல் போராட்டம் செய்தனர். 

துறையூர் நகர், கோட்டாத்தூர் கிராமம் ஆகிய இடங்களில், குடிநீர் வழங்கக் கோரி திங்கள்கிழமை அப்பகுதியினர் சாலை மறியல் போராட்டம் செய்தனர். 
துறையூர் 4 ஆவது வார்டு வடக்குத் தெரு மக்கள் 10 நாட்களாக தண்ணீர் விநியோகிக்கவில்லை என திங்கள்கிழமை காலை 8 மணியளவில் சாலை மறியல் செய்தனர். தகவலறிந்து அங்கு வந்த துறையூர் காவல் ஆய்வாளர் குருநாதன், நகராட்சி உதவி பொறியாளர் ஜெயமாலதி உள்ளிட்டோர் பேச்சுவார்த்தை மேற்கொண்டதில் அவர்கள் கலைந்து சென்றனர்.  
கோட்டாத்தூரிலும் 15 நாள்களாக குடிநீர் வழங்கவில்லை என்று கிராம மக்கள் 3 மணிநேரம் காலிக்குடங்களுடன் சாலை மறியல் செய்தனர். தகவலறிந்த துறையூர் போலீஸார் சம்பவ இடத்துக்கு சென்று மறியலில் ஈடுபட்டவர்களுடன் பேசினர். இதையடுத்து, மறியல் கைவிடப்பட்டது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com