துறையூர் நகர், கோட்டாத்தூர் கிராமம் ஆகிய இடங்களில், குடிநீர் வழங்கக் கோரி திங்கள்கிழமை அப்பகுதியினர் சாலை மறியல் போராட்டம் செய்தனர்.
துறையூர் 4 ஆவது வார்டு வடக்குத் தெரு மக்கள் 10 நாட்களாக தண்ணீர் விநியோகிக்கவில்லை என திங்கள்கிழமை காலை 8 மணியளவில் சாலை மறியல் செய்தனர். தகவலறிந்து அங்கு வந்த துறையூர் காவல் ஆய்வாளர் குருநாதன், நகராட்சி உதவி பொறியாளர் ஜெயமாலதி உள்ளிட்டோர் பேச்சுவார்த்தை மேற்கொண்டதில் அவர்கள் கலைந்து சென்றனர்.
கோட்டாத்தூரிலும் 15 நாள்களாக குடிநீர் வழங்கவில்லை என்று கிராம மக்கள் 3 மணிநேரம் காலிக்குடங்களுடன் சாலை மறியல் செய்தனர். தகவலறிந்த துறையூர் போலீஸார் சம்பவ இடத்துக்கு சென்று மறியலில் ஈடுபட்டவர்களுடன் பேசினர். இதையடுத்து, மறியல் கைவிடப்பட்டது.