விநாயகர் சதுர்த்தியையொட்டி, மணப்பாறை பகுதிகளில் 25 இடங்களில் சிலை பிரதிஷ்டை செய்து வழிபாடு நடத்துவதென இந்து முன்னணி முடிவு செய்துள்ளது.
மணப்பாறையில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற விநாயகர் சதுர்த்தி விசர்ஜன ஆலோசனைக் கூட்டத்துக்கு, இந்து முன்னணி திருச்சி கோட்டச் செயலர் வி.சி.கனகராஜ் தலைமை வகித்தார். ஒன்றியச் செயலர் நல்லுசாமி முன்னிலை வகித்தார். விநாயகர் சதுர்த்தியையொட்டி 25 இடங்களில் சிலைகளை பிரதிஷ்டை செய்வது, விசர்ஜன ஊர்வலத்தில் அதிகமானோர் பங்கேற்று சிறப்பிப்பது என்பனஉள்ளிட்ட தீர்மானங்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டன.
கூட்டத்தில் மாவட்ட அமைப்பாளர் குழந்தைவேல் மற்றும் ஒன்றிய, கிளை கமிட்டி பொறுப்பாளர்கள் பங்கேற்றனர்.