இந்திய கம்யூனிஸ்ட் கட்சி பேரவைக் கூட்டம்

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மேற்குப் பகுதி பேரவைக் கூட்டம்  ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. 

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மேற்குப் பகுதி பேரவைக் கூட்டம்  ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. 
திருச்சி பெரியமிளகுபாறையிலுள்ள கட்சி அலுவலகத்தில் நடைபெற்ற கூட்டத்துக்கு, துணை செயலர் ஆர்.சரண்சிங் தலைமை வகித்தார். கட்சியின் மாநில நிர்வாகக் குழு முன்னாள் உறுப்பினர் ம.செல்வராஜ் கூட்டத்துக்கு முன்னிலை வகித்து,  கட்சியினருக்கு உறுப்பினர் அட்டை வழங்கிச் சிறப்புரையாற்றினார்.   மாநகர் மாவட்டச் செயலர் ஏ.கே. திராவிடமணி,  ஏஐடியூசி மாவட்டத் தலைவர் க. சுரேஷ்உள்ளிட்டோர்  உரையாற்றினர். நிறைவில்  மாவட்டக் குழு உறுப்பினர் எஸ்.சிவா நன்றி கூறினார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com