ஆடிப்பூரத்தையொட்டி, துவரங்குறிச்சி அருள்மிகு பூதநாயகி அம்மன் திருக்கோயிலில் ஞாயிற்றுக்கிழமை 1008 திருவிளக்கு பூஜை நடைபெற்றது.
உலகத்தில் வன்முறைகள் கலைந்து சமாதானம் ஏற்படவும், பருவமழை முறையாக பெய்திட வேண்டியும் ஆடிப்பூர நாளில், கோயில் திடலில் இந்த விளக்கு பூஜை நடத்தப்பட்டது. சிவாச்சாரியார் வேத மந்திரங்கள் முழங்க சுமங்கலி பெண்கள் 1008 குத்துவிளக்கு ஏற்றி சிறப்பு வழிபாடு செய்தனர். இதில் துவரங்குறிச்சி மற்றும் சுற்றுவட்டாரப் பகுதி பெண்கள் பங்கேற்றனர்.