போதையில் தவறி விழுந்த ஓட்டுநர் உயிரிழப்பு

திருச்சியில் குடிபோதையில் தவறி விழுந்த தனியார் பள்ளி வேன் ஓட்டுநர்  உயிரிழந்தார்.

திருச்சியில் குடிபோதையில் தவறி விழுந்த தனியார் பள்ளி வேன் ஓட்டுநர்  உயிரிழந்தார்.
கிராப்பட்டி அரசுக் காலனியைச் சேர்ந்தவர் சீனிவாசன் (37). தனியார் பள்ளியில் வேன் ஓட்டுநராகப் பணியாற்றி வந்தார்.  கணவருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக, இவரது மனைவி  கவிதா  கோபித்துக் கொண்டு தஞ்சாவூரிலுள்ள தனது பெற்றோர் வீட்டுக்குச் சென்று விட்டார்.
தனிமையில் இருந்த சீனிவாசன், வெள்ளிக்கிழமை இரவு அளவுக்கு அதிகமாக மது அருந்திய போது வீட்டின் மாடியிலிருந்து தவறி விழுந்தார். இதை கண்ட அப்பகுதியினர் அவரை மீட்டு, திருச்சி மகாத்மாகாந்தி நினைவு அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். எனினும்சிகிச்சை பலனின்றி சனிக்கிழமை அதிகாலை அவர் உயிரிழந்தார்.
இதுகுறித்து எடமலைப்பட்டிபுதூர் போலீஸார் வழக்குப்பதிந்து விசாரிக்கின்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com