மாநகரில் 9 ரௌடிகள் கைது

மாநகரில் குற்றச்சம்பவங்களைத் தடுக்கும் வகையில், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக 9 ரௌடிகள் தனிப்படை போலீஸாரால் சனிக்கிழமை கைது செய்யப்பட்டனர்.

மாநகரில் குற்றச்சம்பவங்களைத் தடுக்கும் வகையில், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக 9 ரௌடிகள் தனிப்படை போலீஸாரால் சனிக்கிழமை கைது செய்யப்பட்டனர்.
மாநகரில்  வழிப்பறி, நகைபறிப்பு உள்ளிட்ட சம்பவங்கள் தொடர்ந்த நிலையில்,  காவல்துறையினரின் ஆல்பா தனிப்படையினர் தீவிர ரோந்து மேற்கொண்டாலும் குற்ற நிகழ்வுகள் குறையவில்லை.
இந்த நிலையில், வெள்ளிக்கிழமை இரவு  பொன்மலைப்பட்டி பகுதியில் ரௌடிகள் இருவர் அரிவாளுடன் தெருவில் வலம் வந்தது காவல்துறையினர் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
இதைத் தொடர்ந்து குற்றப் பின்னணியிலுள்ள  ரௌடிகளை கைது செய்ய  மாநகரக் காவல் ஆணையர் அ.அமல்ராஜ்   உத்தரவிட்டிருந்தார். அதன்படி குற்றப் பதிவேட்டில் ரௌடிகள் பட்டியலில் உள்ளவர்களை கைது செய்யும் பணியில்  போலீஸார் தீவிரம் காட்டினர். அதன்படி, சிந்தாமணி குமரேசன்(31), கீழதேவதானம் குணா(25), வடக்கு தாராநல்லூர் தேவா(25), தென்னூர் ராஜா(27), துரைராஜ்(27), காஜாமலை அப்பு (எ) சுரேந்திரன்(28), முடுக்குப்பட்டி  ஆண்டவர் ( எ) நல்லேந்திரன் (40), குதுப்பாபள்ளம்  பாரதி(30), பெரியமிளகுபாறை கார்த்திக்(28) ஆகிய 8 பேரை தனிப்படையினர் சனிக்கிழமை கைது செய்தனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com