போலீஸ் எனக் கூறி கல்லூரி மாணவியை வல்லுறவு செய்த ரௌடி கைது

திருச்சியில் கல்லூரி மாணவியைப் பாலியல் வல்லுறவு செய்த ரெளடி மணிகண்டனை தனிப்படை போலீஸார் திங்கள்கிழமை கைது செய்தனர். 

திருச்சியில் கல்லூரி மாணவியைப் பாலியல் வல்லுறவு செய்த ரெளடி மணிகண்டனை தனிப்படை போலீஸார் திங்கள்கிழமை கைது செய்தனர். 
திருச்சி அருகே துவாக்குடியில் உள்ள உயர்கல்வி நிறுவனத்தில் பயிலும் மகாராஷ்டிர மாநிலத்தைச் சேர்ந்த மாணவி, தனது ஆண் நண்பருடன் ஞாயிற்றுக்கிழமை  அப்பகுதியிலுள்ள பேருந்து நிறுத்தப் பகுதியில் நின்று கொண்டிருந்தார். அப்போது, அவ்வழியாக வந்த வாழவந்தான்கோட்டை பெரியார் நகரைச் சேர்ந்த ரெளடி மணிகண்டன் (30), தான் போலீஸ் எனக் கூறி மாணவியின் ஆண்நண்பரைத் தாக்கிவிட்டு மாணவியை தனது மோட்டார் சைக்கிளில் காட்டுப் பகுதிக்கு அழைத்துச் சென்று பாலியல் வல்லுறவு செய்துவிட்டு தப்பியோடிவிட்டார். 
பாதிக்கப்பட்ட கல்லூரி மாணவி, அவரது ஆண் நண்பர் ஆகிய இருவரும் துவாக்குடி காவல்நிலையத்தில் அளித்த புகாரின்பேரில், சம்பவ இடத்திற்கு வந்த திருச்சி சரக காவல்துறை துணைத் தலைவர் வி.பாலகிருஷ்ணன், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜியாவுல் ஹக் ஆகியோர் அப்பகுதியில் உள்ள கேமரா பதிவுகளை ஆய்வு செய்தனர். 
இதைத் தொடர்ந்து அந்த நபரைப் பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டது. இந்நிலையில், துவாக்குடியில் பதுங்கியிருந்த மணிகண்டனை தனிப்படை போலீஸார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com