கணவர் கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட செவிலியர் மர்ம மரணம்

திருச்சி மேலகல்கண்டார் கோட்டை கணேஷ்நகர் பகுதியைச் சேர்ந்தவர் ஜெகன்பாபு மனைவி ஆஜிதா(27),  சிங்காரத்தோப்பு பகுதி தனியார் மருத்துவமனை


திருச்சி: திருச்சி மேலகல்கண்டார் கோட்டை கணேஷ்நகர் பகுதியைச் சேர்ந்தவர் ஜெகன்பாபு மனைவி ஆஜிதா(27),  சிங்காரத்தோப்பு பகுதி தனியார் மருத்துவமனை செவிலியர். ஜெகன்பாபு கடந்த 2 ஆண்டுக்கு முன் முடுக்கப்பட்டி பகுதியில் உள்ள ரயில்வே தண்டவாளத்தில் மர்மமான முறையில் இறந்துகிடந்தார்.

இது குறித்து ரயில்வே போலீஸார் நடத்திய விசாரணையில் அவரது மனைவி ஆஜிதா தனது கள்ளக்காதலனுடன் சேர்ந்து ஜெகன்பாபுவை கொலை செய்தது தெரிய வர இருவரும் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.  ஜாமீனில் வெளியே வந்த ஆஜீதா தனது இரண்டரை வயதுப் பெண் குழந்தையுடன் தனியாக வசித்து வந்தார். 

இந்நிலையில் சனிக்கிழமை மாலை வரை ஆஜிதா வீடு திறக்கப்படாததைக் கண்ட அப்பகுதி மக்கள் ஜன்னல் வழியாகப் பார்த்தபோது அவர் மர்மமான முறையில் இறந்துகிடந்தார். தகவலறிந்து வந்த பொன்மலை போலீஸார் ஆஜிதா உடலை கைப்பற்றி விசாரணை நடத்தினர். விசாரணையில், ஆஜிதா தனது வீட்டு மின்விசிறியில் சேலையில் தூக்கிட்டுத் தற்கொலைக்கு முயற்சித்துள்ளார். பின்னர் அளவுக்கு அதிகமாக மயக்க மருந்து உட்கொண்டு தற்கொலைக்கு செய்திருக்கலாம் எனத் தெரிய வந்தது.  தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com