குற்றச் செய்திகள்

வீட்டருகே தவறிவிழுந்து முதியவர் சாவு 
திருச்சி, உறையூர், லிங்கம் நகர் பகுதியைச் சேர்ந்தவர் கோ. கலியராஜ் (61). தனியார் மருந்தகத்தில் தொழிலாளியாக பணியாற்றி வந்தார். அவர் தூக்க மாத்திரை உட்கொள்வது வழக்கமாம். இவர், கடந்த சனிக்கிழமை இரவு மாத்திரை உட்கொண்டு தூங்கியுள்ளார். தூக்கம் வராத நிலையில், ஞாயிற்றுக்கிழமை அதிகாலை வீட்டருகே உலாவுவதற்கு வந்த அவர்  தடுமாறி விழுந்ததில், தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. இதையடுத்து, அவரை மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்ற சிறிதுநேரத்திலேயே அவர் உயிரிழந்தார். இதுகுறித்து உறையூர் போலீஸார் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.


செல்லிடப்பேசி திருடிய இருவர் கைது : முசிறி பகுதியைச் சேர்ந்தவர் கோவிந்தராஜன். சொந்தமாக லாரி வைத்து ஓட்டிவருகிறார். திருச்சி அரியமங்கலம் பகுதியில் கடந்த திங்கள் கிழமை இரவு தனது லாரியை நிறுத்தி அதில் உறங்கிக்கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த மர்ம நபர்கள் இருவர் அவரது சட்டை பையிலிருந்த செல்லிடப்பேசி மற்றும் ரொக்கத்தை எடுக்க முயன்றனர். 
இதையடுத்து சப்தமிட்ட அவர் அக்கம் பக்கத்தினர் உதவியுடன் இருவரையும் பிடித்து அரியமங்கலம் காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். போலீஸார் விசாரணையில், லால்குடி அருகேயுள்ள தாளக்குடியைச் சேர்ந்த ஆர். வினோத் (23), ச. சூரியபிரகாஷ் (22) ஆகிய இருவரும் திருட்டு சம்பவத்தில் ஈடுபட்டது தெரியவந்தது. இதனையடுத்து இருவரையும் போலீஸார் கைது செய்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com