சாக்கடை கால்வாயில் விழுந்த ராஜஸ்தான் தொழிலாளி மீட்பு

திருச்சியில் சாக்கடை கால்வாயில் உயிருக்குப் போராடிக் கொண்டிருந்த ராஜஸ்தான் தொழிலாளியைத் தீயணைப்பு வீரர்கள் புதன்கிழமை மீட்டனர்.

திருச்சியில் சாக்கடை கால்வாயில் உயிருக்குப் போராடிக் கொண்டிருந்த ராஜஸ்தான் தொழிலாளியைத் தீயணைப்பு வீரர்கள் புதன்கிழமை மீட்டனர்.
 ராஜஸ்தான் மாநிலத்தைச் சேர்ந்தவர் கார்த்திக் (45). கூலித் தொழிலாளி. இவர், திருச்சியில் வேலை பார்த்துக்கொண்டு நடைமேடைகளில் இரவுநேரங்களில் தூங்கி வந்தார். வேலையில்லாத நேரங்களில் நெகிழி உள்ளிட்ட பழைய பொருள்களை சேகரிக்கும் பணியில் ஈடுபடுவது வழக்கம்.
 அந்த வகையில், புதன்கிழமை காலை மேலசிந்தாமணி கவுண்டர் தோப்பு பகுதியில் உள்ள சாக்கடை கால்வாயில் பழைய பொருள்களை சேகரித்துக் கொண்டிருந்தார். அப்போது புல் தரையில் கால் வைத்தபோது சாக்கடை கால்வாயில் தவறி விழுந்தார்.
 உயிருக்கு போராடிக் கொண்டிருந்த அவரை அப்பகுதி மக்கள் காப்பாற்ற முயன்றும் முடியவில்லை. தகவலறிந்து வந்த கன்டோன்மென்ட் தீயணைப்பு வீரர்கள் கார்த்திக்கை உயிருடன் மீட்டனர்.
 இதைத்தொடர்ந்து அவருக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது. இதுகுறித்து கோட்டை போலீஸார் கார்த்திக்கிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com