நடந்து சென்ற பெண் கழுத்தில் அணிந்திருந்த 10 பவுன் தங்க தாலிக்கொடியை பறித்துச் சென்ற மர்மநபர்களைப் போலீஸார் தேடிவருகின்றனர்.
துறையூர் முத்து நகரைச் சேர்ந்தவர் அய்யனார் மனைவி செல்லபாப்பு(56). இவர், புதன்கிழமை காலை கடைவீதிக்குச் சென்றுவிட்டு வீடு திரும்பிக் கொண்டிருந்தார். இவர் அருகே எதிர்திசையிலிருந்து இரு சக்கர வாகனத்தில் அடையாளம் தெரியாத இருவர் வந்து கொண்டிருந்தனர். அப்போது, கண் இமைக்கும் நேரத்தில் வாகனத்தின் பின்னால் அமர்ந்திருந்த நபர் செல்லபாப்பு கழுத்தில் அணிந்திருந்த 10 பவுன் தங்க தாலிக்கொடி(சங்கிலி) யைப் பறித்தார். இதில் செல்லப்பாப்பு தாலி பகுதி தவிர மற்ற பகுதி மர்மநபர்கள் பறித்துக் கொண்டு தப்பியோடினர். இது தொடர்பான புகாரின் பேரில் துறையூர் போலீஸார் விசாரிக்கின்றனர்.