மரம் விழுந்ததால் ரயில் தாமதம்

திருச்சி கோட் டை ரயில் நிலையம் அருகே மரம் விழுந்ததால் ஈரோடு - திருச்சி பயணிகள் ரயில் சுமார் 15 நிமிடங்கள் தாமதமாக புறப்பட்டு ஜங்ஷன் வந்தடைந்தது.

திருச்சி கோட் டை ரயில் நிலையம் அருகே மரம் விழுந்ததால் ஈரோடு - திருச்சி பயணிகள் ரயில் சுமார் 15 நிமிடங்கள் தாமதமாக புறப்பட்டு ஜங்ஷன் வந்தடைந்தது.
 ஈரோடு - திருச்சி பயணிகள் ரயில், கோட்டை ரயில் நிலையத்தை இரவு 9.45 மணியளவில் வந்தடைந்தது. ரயில் நிலையத்துக்கு சற்று முன்பு ரயில்வே பாலம் அருகே சிறு மரம் ஒன்று விழுந்து கிடந்தது.
 இதனையடுத்து ரயில் நிறுத்தப்பட்டது. பின்னர் அடுத்த சில நிமிடங்களில் ரயில்வே தொழிலாளர்கள் மரத்தை அகற்றியதைத் தொடர்ந்து ரயில் சுமார் 15 நிமிடங்கள் தாமதமாக திருச்சி ஜங்ஷன் ரயில் நிலையத்துக்கு புறப்பட்டுச் சென்றது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com