லால்குடி வட் டாட்சியர் அலுவலகத்தில் எரிவாயு நுகர்வோர் குறைதீர் கூட்டம் சனிக்கிழமை நடைபெறவுள்ளது.
எரிவாயு உருளைகள் (சிலிண்டர்கள்) வழங்குவதில் ஏற்படும் கால தாமதம், முறைகேடுகளைக் களையும் விதமாக நடைபெறும் இந்த எரிவாயு நுகர்வோர் குறைதீர் நாள் கூட்டத்தில், மாவட்ட வருவாய் அலுவலர் தலைமை வகிக்கிறார்.
இதில் லால்குடி வட்டத்தில் உள்ள அனைத்து எண்ணெய் நிறுவன எரிவாயு முகவர்கள், மேலாளர்கள், வாடிக்கையாளர்கள் பங்கேற்கின்றனர்.
எனவே லால்குடி வட்டத்தில் எரிவாயு நுகர்வோர் மறு நிரப்பு செய்து பெறுவதில் ஏற்படும் தாமதம், மற்றும் குறைகளை வாடிக்கையாளர்கள் புகார் மனுக்கள் மூலம் தெரிவித்து தீர்வு காணலாம் என மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.