துறையூர் வட்டத்தில் ஞாயிற்றுக்கிழமை (ஆக.25) நடைபெற இருந்த முதலமைச்சரின் சிறப்பு குறைதீர் கூட்டம் ரத்து செய்யப்பட்டது.
துறையூர் வட்டத்தில் கடந்த 21ஆம் தேதி முதல் முதலமைச்சரின் சிறப்பு குறைதீர் கூட்டம் ஒவ்வொரு பகுதியாக நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் ஞாயிற்றுக்கிழமை விடுமுறையாதலால் அட்டவணைப்படி ஆலத்துடையான்பட்டி, சிக்கத்தம்பூர்(வ), கீரம்பூர், வீரமச்சான்பட்டி, காரப்புடையான்பட்டி, கோட்டப்பாளையம்(கி) உள்ளிட்ட கிராமங்களில் உள்ள கிராம நிர்வாக அலுவலர் அலுவலகங்களில் நடைபெற இருந்த முதலமைச்சரின் சிறப்பு குறைதீர் கூட்டம் தேதி குறிப்பிடப்படாமல் ரத்து செய்யப்பட்டுள்ளது என்றும், இந்தப் பகுதிகளில் குறைதீர் கூட்டம் நடைபெறக் கூடிய நாள் பின்னர் அறிவிக்கப்படும் என்றும் வட்டாட்சியர் அலுவலகத்தில் தெரிவிக்கப்பட்டது.