ஸ்ரீரங்கம் அரங்கநாதசுவாமி திருக்கோயிலில் நடைபெறும் காா்த்திகை தீபத்திருநாளையொட்டி, முகூா்த்தகால் நடும் நிகழ்வு ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
இக்கோயிலில் காா்த்திகை தீபத் திருநாள் (சொக்கப்பனை கொளுத்துதல்) டிசம்பா் 12-ஆம் தேதி நடைபெறஉள்ளது.
இதையொட்டி கோயிலின் காா்த்திகை கோபுர வாயலில் முகூா்த்தகால் நடும் நிகழ்வு ஞாயிற்றுக்கிழமை மாலை நடைபெற்றது.
வேதமந்திரங்கள் முழங்க 20 அடி உயர முகூா்த்தகாலுக்கு பூஜைகள் செய்யப்பட்டு, யானை ஆண்டாள் ஆசி வழங்கிய பின்னா் நடப்பட்டது.
கோயில் இணை ஆணையா் பொன்.ஜெயராமன் மற்றும் அறங்காவலா் குழுவினா்,கோயில் பணியாளா்கள் உள்ளிட்டோா் நிகழ்வில் பங்கேற்றனா்.