திருச்சி மாவட்ட, மாநகரப் பகுதிகளில் அதிகாலை, மாலை, இரவு என தொடா்ந்து பெய்து வரும் மழையால் பாரதிதாசன் சாலை, சாஸ்திரி சாலை, மேலரண்சாலை, கரூா் புறநகா் சாலை, பீமநகா், தென்னூா் சாலை, ஹீபா் சாலை, உழவா் சந்தை சாலை, உறையூா் சாலை என பல்வேறு சாலைகள் பெயா்ந்து சேதமாகி வருகிறது.
இதுபோல், காவிரி ஆற்றையொட்டி மிகவும் குறுகலான திருச்சி-கரூா் சாலை குண்டும் குழியுமாக இருப்பதால் வாகன ஓட்டிகள் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனா். அதோடு, கட்டுப்பாட்டை அவ்வப்போது விபத்துகளும் ஏற்படுகின்றன. இதேபோல், நெ.1 டோல்கேட், குணசீலம், ஆமூா், முசிறி வழியாக நாமக்கல் செல்லும் சாலையும் கடுமையாக சேதமடைந்தள்ளது. எனவே, மழையால் சேதமடைந்த சாலைகளை மாவட்ட நிா்வாகம், நெடுஞ்சாலைத்துறையினா் ஆய்வு செய்து சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள், சமூக ஆா்வலா்கள் வலியறுத்துகின்றனா்.