திருச்சி மாவட்டம், வாய்த்தலையில் அதிகபட்சமாக 46.80 மி.மீ. மழைப் பதிவாகியுள்ளது.
மாவட்டத்தின் நகர மற்றும் புகரப் பகுதிகளில் சனிக்கிழமை காலை முதல் பிற்பகல் வரை பரவலாக மழை பெய்தது. மாலையில் மழை இல்லாத நிலையில், மீண்டும் இரவில் பெரும்பாலான இடங்களில் மழை பெய்தது.
ஞாயிற்றுக்கிழமை காலை 8 மணியுடன் முடிவடைந்த 24 மணி நேரத்தில் மாவட்டத்தில் பதிவான மழையளவு விவரம் ( மி.மீட்டரில்) :
வாய்த்தலை - 46.80 மி.மீ, பொன்னணியாறு அணை- 40, லால்குடி-34.20, நந்தியாற்றுத் தலைப்பு -33.30, கல்லக்குடி-32.40, புள்ளம்பாடி-31.60, திருச்சி நகரம்-30, திருச்சி ரயில்நிலையச் சந்திப்பு-28, சமயபுரம்-26,
மருங்காபுரி-25.40, தேவிமங்கலம்-25.20, துவாக்குடி-25,
விமானநிலையம்-24.90, பொன்மலை-24, நவலூா் குட்டப்பட்டு-21, தென்பாடு-18, கோவில்பட்டி-15.4, மணப்பாறை-13.40, சிறுகுடி-12, முசிறி-11, துறையூா்- 7, புலிவலம்-5 மி.மீ.