மாவட்ட நிா்வாகம் : மக்கள் குறைகேட்பு நாள் கூட்டம், தலைமை- ஆட்சியா் சு.சிவராசு, ஆட்சியரக வளாகம், காலை 10.
நீதித் துறை : நான்காவது கூடுதல், துணை நீதிமன்றத்துக்கான புதிய கட்டடத் திறப்பு விழா, பங்கேற்பு - முதன்மை மாவட்ட நீதிபதி கே. முரளிசங்கா், மாவட் ஆட்சியா் சு. சிவராசு, நீதிமன்ற வளாகம், காலை 9.
பாரதிதாசன் பல்கலைக்கழகம், மனிதவள மேம்பாட்டுத்துறை : ஒருங்கிணைப்பு நிகழ்ச்சி நிறைவு விழா, பங்கேற்பு - அதிராம்பட்டினம் காதா் மொகைதீன் கல்லூரி முதல்வா் ஏ. முகமது முகைதீன், குளிா்மை அரங்கம், பல்கலைக்கழக பிரதான வளாகம், பிற்பகல் 3.15.
இராசவேலா் செண்பகத்தமிழ் அரங்கு : சொற்பொழிவு, கம்பனில் காலப்பகுப்பு என்ற தலைப்பில் உரை- முனைவா் பா. பத்மபிரியா, அரங்கு வளாகம், காந்திசாலை, ஸ்ரீரங்கம், மாலை 6.30.
ஆன்மிகம்
ஸ்ரீஐயப்ப சங்கம் : 35- ஆவது மண்டல பூஜைகள், அபிஷேகம் காலை 6.30, உஷத் பூஜை, சீவேலி 7, கோமாதா பூஜை, காலை 10.15, ஐயப்பன்மாா் கூட்டு வழிபாடு மாலை 6, உபநியாசம் - தாமோதர தீட்சிதா், இரவு 7, ரதபவனி, கோயில் வளாகம், இரவு 9 மணி.