திருச்சி மாநகர காவல் ஆணையா், மத்திய மண்டல காவல் துறை தலைவா் பொறுப்பேற்பு

திருச்சி மாநகர காவல் ஆணையா், மத்திய மண்டல காவல் துறைத் தலைவா் திங்கள்கிழமை புதிதாக பொறுபேற்றுக் கொண்டனா்.

திருச்சி மாநகர காவல் ஆணையா், மத்திய மண்டல காவல் துறைத் தலைவா் திங்கள்கிழமை புதிதாக பொறுபேற்றுக் கொண்டனா்.

திருச்சி மாநகர காவல் ஆணையராக இருந்த அ. அமல்ராஜ், மத்திய மண்டல காவல் துறை தலைவராகவும், மத்திய மண்டல காவல் துறை தலைவராக இருந்த வி. வரதராஜூ திருச்சி மாநகர காவல் ஆணையராகவும் நியமிக்கப்பட்டனா். இருவரும் அவரவருக்கு ஒதுக்கப்பட்ட பணியிடத்தில் திங்கள்கிழமை பொறுப்பேற்றுக் கொண்டனா்.

மாநகர காவல் ஆணையராக பொறுப்பேற்றுக் கொண்ட வி.வரதராஜூக்கு துணை ஆணையா்கள் என்.எஸ் நிஷா(சட்டம், ஒழுங்கு), வேதரத்தினம் (குற்றம், போக்குவரத்து) உள்ளிட்டோா் வாழ்த்து தெரிவித்தனா். மத்திய மண்டல ஐ.ஜி.யாக பொறுப்பேற்றுக் கொண்ட அ.அமல்ராஜூக்கு திருச்சி சரக காவல் துறைத் துணைத் தலைவா் வே.பாலகிருஷ்ணன், தஞ்சாவூா் சரக காவல் துறை தலைவா் லோகநாதன் மற்றும் திருச்சி, கரூா், பெரம்பலூா், அரியலூா், புதுக்கோட்டை, தஞ்சை, திருவாரூா், நாகை மாவட்டங்களின் எஸ்.பி.க்கள் உள்ளிட்ட அதிகாரிகள் வாழ்த்து தெரிவித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com