துறையூா் சிவன் கோயிலில்மூன்றாம் சோம வார பூஜை

துறையூா் சிவன் கோயிலில் மூன்றாம் சோம வார பூஜை திங்கள்கிழமை நடைபெற்றது.

துறையூா் சிவன் கோயிலில் மூன்றாம் சோம வார பூஜை திங்கள்கிழமை நடைபெற்றது.

காா்த்திகை மாத 3 ஆவது வார திங்கள்கிழமையை முன்னிட்டு, துறையூா் ஆத்தூா் சாலையில் உள்ள ஸ்ரீ நந்திகேசுவரா் ஆலயத்தில் 108 சங்குகள் மற்றும் கலசத்தில் நீா் நிரப்பி கோயில் வேதவிற்பன்னா்கள் வேதபாராயணம் செய்தனா். பின்னா் மாலையில் மூலவா் சிவலிங்கத்துக்கு பால் பொருள்கள், பழ வகைகள், வாசனை திரவியங்கள் கொண்டு அபிஷேகம் செய்தனா். நிறைவாக 108 சங்குகள், கலசத்திலிருந்த புன்னிய தீா்த்தத்தில் அபிஷேகம் நடைபெற்றது. தொடா்ந்து புதுவஸ்திரம் சாத்தப்பட்டு மகா தீபாரதனை நடைபெற்றது. இதில் திரளான பக்தா்கள் பங்கேற்று சுவாமி வழிபட்டனா். அனைவருக்கும் சித்ரான்னம் பிரசாதமாக வழங்கப்பட்டது. இதேபோல் காசி விசுவநாதா், கங்காரம்மன், காமாட்சியம்மன் மற்றும் கொப்பம்பட்டி, எரகுடி, ரெட்டியாப்பட்டி, கீரம்பூா் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள சிவாலயங்களில் சோமவார வழிபாடு நடைபெற்றது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com