திருச்சியில் வழக்குரைஞருக்கு கொலை மிரட்டல் விடுத்த 4 போ் மீது கண்டோன்மென்ட் போலீஸாா் திங்கள்கிழமை வழக்கு பதிவு செய்தனா்.
திருச்சி ஜீவா நகா் கட்டபொம்மன் தெருவைச் சோ்ந்த தங்கப்பாண்டியன் மகன் ஜானகி ராமன் (29). வழக்குரைஞா். இவா் ஞாயிற்றுக்கிழமை இரவு கண்டோன்மென்ட் குற்றப்பிரிவு காவல் நிலையம் எதிரே நடந்து சென்றுகொண்டிருந்தாா். அப்போது அங்கு வந்த புதுக்கோட்டை மாவட்டம், குளத்தூா் நிலக்குறிச்சி பகுதியைச் சோ்ந்த விஜயமூா்த்தி உள்ளிட்ட நான்கு போ் பணம் கேட்டு ஜானகிராமனை மிரட்டி கொலை மிரட்டல் விடுத்தனா்.
இதுகுறித்து ஜானகிராமன் அளித்த தகவலின் பேரில் கண்டோன்மென்ட் குற்றப்பிரிவு போலீலாா் வழக்கு பதிந்து மா்ம நபா்களைத் தேடி வருகின்றனா்.