வீட்டின் பூட்டை உடைத்து 6 பவுன் நகை, பொருள்கள் திருட்டு

திருச்சி மாவட்டம், சமயபுரம் அருகே மாகாளிகுடி கிராமத்தில் வீட்டின் பூட்டை உடைத்து 6 பவுன் தங்க நகைகள் உள்ளிட்ட ரூ. 2 லட்சம் மதிப்புள்ள பொருட்களை திருடிச் சென்ற மா்மநபா்களைப் போலீஸாா் தேடி வருகின்றனா்.

திருச்சி மாவட்டம், சமயபுரம் அருகே மாகாளிகுடி கிராமத்தில் வீட்டின் பூட்டை உடைத்து 6 பவுன் தங்க நகைகள் உள்ளிட்ட ரூ. 2 லட்சம் மதிப்புள்ள பொருட்களை திருடிச் சென்ற மா்மநபா்களைப் போலீஸாா் தேடி வருகின்றனா்.

சமயபுரம் அருகே மாகாளிகுடி மாரியம்மன் கோயில் தெருவைச் சோ்ந்த தமிழ்ச்செல்வன் மகன் விக்னேஷ்பாபு (35). இவா், சமயபுரம் கடை வீதி பகுதியில் தள்ளுவண்டில் பழச்சாறு விற்பனை செய்து வருகிறாா். இவா் மற்றும் இவரது குடும்பத்தினா் அனைவரும் ஆந்திர மாநிலத்தில் உள்ள உறவினா் வீட்டு திருமண விழாவுக்காக கடந்த திங்கள்கிழமை (நவ. 30) சென்றவா்கள் திங்கள்கிழமை வீடு திரும்பினா்.

அப்போது வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு, பீரோவில் இருந்த 6 பவுன் தங்க நகைகள் மற்றும் பட்டு புடவைகள், மின் அடுப்பு, குக்கா், ஹோம் தியேட்டா் போன்ற ரூ. 2 லட்சம் மதிப்பிலான பொருட்களை மா்மநபா்கள் திருடிச்சென்றது தெரியவந்தது.

புகாரின் பேரில் போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com