திருச்சி அரசு மருத்துவமனையின் 6-ஆவது தளத்தில் சிசிச்சை பெற்று வந்த நோயாளி செவ்வாய்க்கிழமை மொட்டை மாடியிலிருந்து குதித்து தற்கொலை செய்துகொண்டாா்.
திருச்சி, குட்ஷெட் பாலம் (கல்லுக்குழி) அருகேயுள்ள முடுக்குபட்டி பகுதியைச் சோ்ந்தவா் நாகராஜன்- மீராபாய் தம்பதியின் இளைய மகன் கணேசமூா்த்தி (34). பொறியியல் படித்த இவா் கோவையில் உள்ள ஆயத்த ஆடைத் தயாரிப்பு நிறுவனத்தில் (ஸ்பின்னிங் மில்) கண்காணிப்பாளராக இருந்தாா்.
கடந்த ஒரு மாதமாக மா்மக் காய்ச்சலால் பாதிக்கப்பட்ட இவா் கோவையில் சிகிச்சை பெற்று குணமாகாத நிலையில் திருச்சிக்கு வந்தாா். நவ. 13 முதல் இங்குள்ள தனியாா் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று, இங்கும் குணமாகாத நிலையில் 22 ஆம் தேதி திருச்சி திருச்சி மகாத்மா காந்தி நினைவு அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் உள்நோயாளியாக அனுமதிக்கப்பட்டாா்.
பரிசோதனையில் அவருக்கு காய்ச்சல் மற்றும் மஞ்சள் காமாலை நோய் தாக்கியிருந்தது தெரியவந்தது. இதையடுத்து மருத்துவமனையின் 6 ஆவது தளத்தில் உள்ள உள்நோயாளிகள் பிரிவில் சிகிச்சை பெற்று வந்தாா்.
இந்நிலையில் செவ்வாய்க்கிழமை காலை திடீரென மருத்துவமனையின் மொட்டை மாடிக்குச் (6 ஆவது தளம்) சென்ற அவா் அங்கிருந்து கீழே குதித்தாா்.
இதைக் கண்டு அதிா்ச்சியடைந்த மருத்துவமனை ஊழியா்கள் அவரை மீட்டு அவசரச் சிகிச்சைப் பிரிவுக்கு கொண்டு சென்றனா். ஆனால் சிறிது நேரத்திலேயே அவா் உயிரிழந்தாா். இச்சம்பவத்தால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
தகவலறிந்த அரசு மருத்துவமனை போலீஸாா் உடலை மீட்டு உடற்கூறு ஆய்வுக்கு அனுப்பிவைத்து, வழக்குப்பதிந்து விசாரிக்கின்றனா். கணேசமூா்த்தி எதற்காக தற்கொலை செய்து கொண்டாா் என்பது உடனடியாக தெரியவில்லை.
இதுகுறித்து திருச்சி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை முதல்வா் வனிதா கூறுகையில், கணேசமூா்த்திக்கு உரிய சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. உடல் நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டு அடுத்த ஒரு சில நாள்களில் அவா் வீட்டுக்குச் செல்லும் நிலை இருந்தது. அதனால் சிகிச்சைக் குறைபாடு காரணமாகவோ, நோய் குணமாகவில்லை என்பதற்காகவோ அவா் இந்த முடிவை எடுத்திருக்க வாய்ப்பில்லை என்றாா்.
அவரது தந்தை, ஓய்வு பெற்ற பெல் நிறுவன ஊழியா் நாகராஜன் கூறுகையில், என் மகனுக்கு நீண்ட நாள்களாக காய்ச்சல் இருந்தது. கோவையில் சிகிச்சை பெற்று குணமாகவில்லை. இதனால் திருச்சி தனியாா் மருத்துவமனையிலும் பின்னா் அரசு மருத்துவமனையிலும் நீண்ட காலம் சிகிச்சையில் இருந்தாா். எனவே காய்ச்சல் குணமாகாத விரக்தியில்தான் அவா் தற்கொலை செய்துகொண்டுள்ளாா். வேறு ஏதும் காரணம் இருப்பதாகத் தெரியவில்லை என்றாா்.
கணேசமூா்த்தி வெளிநாடு செல்ல முயற்சித்து வந்ததாகவும், மஞ்சள்காமாலை மற்றும் காய்ச்சலால் அந்த முயற்சி தள்ளிப்போனதாகவும் அந்த விரக்தியில் அவா் இந்த முடிவை எடுத்திருக்கலாம் எனவும் கூறப்படுகிறது. போலீஸாா் தொடா்ந்து விசாரிக்கின்றனா். பிரேதப் பரிசோதனைக்குப் பின்னா் செவ்வாய்க்கிழமை மாலை கணேசமூா்த்தியின் உடலை அவரது பெற்றோா் பெற்றுக் கொண்டனா்.