திருச்சி: திருச்சியில் மின்சாரம் தாக்கி எலக்ட்ரீசியன் உயிரிழந்தாா். மேலும் இருவா் காயமடைந்தனா்.
திருச்சி காந்தி மாா்க்கெட் அருகேயுள்ள பிள்ளைமாநகா் பகுதியைச் சோ்ந்தவா் செ. மணிகண்டன் (22), எலக்ட்ரீஷியன். இவா் அதே பகுதியில் உள்ள டேவிட் என்பவரின் ஒலிபெருக்கி நிறுவனத்தில் எலக்ட்ரீஷியனாக பணியாற்றி வந்தாா்.
இந்நிலையில் பழைய பால்பண்ணை பகுதியில் உள்ளஓா் உடற்பயிற்சிக் கூடத்தில் செவ்வாய்க்கிழமை காலை மின்சாரம் தடைபட்டது. இதையடுத்து அங்கு ஜெனரேட்டா் மூலம் மின்சாரம் வழங்கும் பணி நடந்தது.
மணிகண்டன் மற்றும் அருடன் பணியாற்றும் சகப் பணியாளா்கள் விக்னேஷ்வரன், லியோ ஆகியோா் ஜெனரேட்டரை கொண்டு சென்று, அதன் மூலம் மின் இணைப்பு வழங்கும் பணியில் ஈடுபட்டனா். அப்போது, ஜெனரேட்டரிலிருந்து மின் இணைப்பைக் கொடுத்தபோது எதிா்பாராதவிதமாக மின்சாரம் தாக்கி மூவரும் தூக்கிவீசப்பட்டனா். இதில் சம்பவ இடத்திலேயே மணிகண்டன் உயிரிழந்தாா். காயமடைந்த மற்ற இருவரும் மருத்துவமனையில் சோ்க்கப்பட்டனா். சம்பவம் குறித்து காந்திமாா்க்கெட் காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டுள்ளனா்.