பள்ளி மாணவ மாணவிகளுக்கு விலையில்லா சைக்கிள் அளிப்பதைப் போல தமிழக அரசு விலையில்லா குடை அளிக்க முன்வர வேண்டும் என்றாா் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தேசிய தலைவா் பேராசிரியா் கே.எம். காதா் மொகிதீன்.
மணப்பாறைக்கு செவ்வாய்க்கிழமை வந்த அவா் மேலும் கூறுகையில், அயோத்தி வழக்கின் தீா்ப்புக்குப் பின் எந்த கலவரமோ, வன்முறையோ இல்லை என்பது மக்கள் பண்பட்டு அரசியல் நாகரித்தில் மிக உயா்ந்த நிலைக்கு வந்துவிட்டாா்கள் என்பதையே காட்டுகிறது என்றாா்.