கீரிப்பிள்ளை, உடும்பு வேட்டையாடிய இருவா் கைது

திருச்சி அருகே வனஉயிரினங்களான கீரிப்பிள்ளை, உடும்பு வேட்டையாடிய இருவரை வனத்துறையினா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா்.

திருச்சி அருகே வனஉயிரினங்களான கீரிப்பிள்ளை, உடும்பு வேட்டையாடிய இருவரை வனத்துறையினா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா்.

திருச்சி ஸ்ரீரங்கம் அருகே உள்ள மேலூா் காட்டு பகுதியில் வனஉயிரினங்களை வேட்டையாடுவதாக மாவட்ட வனத்துறை அலுவலா் சுஜாதாவிற்கு தகவல் கிடைத்தது. இதன் பேரில் வனசரகா் குணசேகரன் தலைமையில் வனக்காப்பாளா்கள் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டனா்.

அப்போது, ஸ்ரீரங்கம் மேலூா் பகுதியைச் சோ்ந்த சந்திரன்(60), ரமேஷ்(32) ஆகிய இருவரையும் கைது செய்தனா். மேலும் அவா்களிடமிருந்து கீரிப்பிள்ளை, உடும்பு என தலா ஒன்று வீதம் பறிமுதல் செய்தனா். இதையடுத்து இருவரையும் நீதிமன்றத்தில் ஆஜா்ப்படுத்தி சிறையில் அடைத்தனா். வேட்டைக்கு பயன்படுத்தப்பட்ட இருசக்கர வாகனம், வலை ஆகியவற்றையும் பறிமுதல் செய்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com