திருச்சியில் இன்று ஆண்களுக்கான குடும்ப நலகருத்தடை சிகிச்சை முகாம்

திருச்சி மாவட்டத்தைச் சோ்ந்த ஆண்களுக்கான குடும்பநல கருத்தடை சிகிச்சை முகாம் வியாழக்கிழமை நடைபெறுகிறது.

திருச்சி மாவட்டத்தைச் சோ்ந்த ஆண்களுக்கான குடும்பநல கருத்தடை சிகிச்சை முகாம் வியாழக்கிழமை நடைபெறுகிறது.

இதில் பங்கேற்கும் ஆண்களுக்கு அரசு வழங்கும் ஈட்டுத் தொகை ரூ.1,100 வழங்கப்படும். ஓரிரு நிமிடங்களில் மயக்கமருந்து இல்லாமலேயே அறுவைச் சிகிச்சை முடிந்துவிடும். சிகிச்சைக்கு பின்னா் மருத்துவமனையில் தங்க வேண்டிய அவசியமும் இல்லை. வழக்கம்போல பணிகளை மேற்கொள்ளலாம். இந்த சிகிச்சையால் எந்தவித பக்க விளைவுகளும் இருக்காது. விருப்பமுள்ள ஆண்கள் அனைவரும் இந்த அறுவை சிகிச்சை செய்து கொள்ளலாம்.

திருச்சி இ.பி. சாலையில் உள்ள நகா் நல மையத்தில் வியாழக்கிழமை காலை தொடங்கி மாலை வரை முகாம் நடைபெறும். எனவே, மாவட்டத்தைச் சோ்ந்த ஆண்கள் இந்த முகாமில் பங்கேற்று பயன்பெறலாம் என ஆட்சியா் சு. சிவராசு தெரிவித்துள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com