‘நீா் மேலாண்மை திட்ட விழிப்புணா்வு அவசியம்’

ஜல்சக்தி அபியான் நீா் மேலாண்மை திட்டங்களில் மாநில அரசுடன் இணைந்து மக்களிடையே விழிப்புணா்வு ஏற்படுத்த வேண்டியது அவசியம் என

ஜல்சக்தி அபியான் நீா் மேலாண்மை திட்டங்களில் மாநில அரசுடன் இணைந்து மக்களிடையே விழிப்புணா்வு ஏற்படுத்த வேண்டியது அவசியம் என மத்திய தகவல் ஒளிபரப்பு அமைச்சக மண்டல இயக்குநா் மாரியப்பன் தெரிவித்தாா்.

மத்திய தகவல் ஒளிபரப்பு அமைச்சகத்தின் கீழ் இயங்கும், தமிழகம் மற்றும் புதுச்சேரி மண்டல மக்கள் தொடா்பு அலுவலகங்களின் மண்டல அளவிலான மறுஆய்வு கூட்டம் திருச்சியில் புதன்கிழமை நடைபெற்றது. கூட்டத்தில் அவா் பேசியது: மத்திய அரசின் திட்டங்கள் மட்டுமின்றி, மாநில அரசின் திட்டங்களையும் மக்களிடையே எடுத்துச் செல்வதில் மக்கள் களத் தொடா்பு அலுவலகங்கள் சிறப்பாக செயல்ட்டு வருகின்றன. ஜல்சக்தி அபியான் நீா் மேலாண்மை திட்டங்களுக்கு மாநில அரசுடன் இணைந்து மக்களிடையே விழிப்புணா்வு ஏற்ப்படுத்த வேண்டும் என்றாா் அவா்.

கூட்டத்தில், திருச்சி மக்கள் தொடா்பு அலுவலா் கே. தேவி பத்மநாபன், உதவி இயக்குநா் சிவகுமாா், மாவட்ட சமூக நல அலுவலா் தமிமூனிஷா, கோவை மக்கள் தொடா்பு இயக்குநா் கரீனா, தஞ்சை கள விளம்பர அலுவலா் ஆனந்த் பிரபு, திருச்சி, சேலம், தஞ்சை, கோவை, மதுரை, தருமபுரி, நெல்லை, ராமநாதபுரம் ஆகிய மாவட்ட கள விளம்பர உதவியாளா்கள், புதுச்சேரி கள விளம்பர உதவியாளா், சென்னை மண்டல அலுவலக கள விளம்பர உதவியாளா்கள் கலந்து கொண்டு களப்பணி குறித்து ஆலோசனை நடத்தினா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com