திருச்சி: மாவட்டத்தில் நடைபெறவுள்ள ஊரகப் பகுதிகளுக்கான உள்ளாட்சி தோ்தலில் சனிக்கிழமை மட்டும் 2,581 போ் வேட்பு மனு தாக்கல் செய்தனா்.
திருச்சி மாவட்டத்தில் முதல்கட்டமாக நடைபெறும் ஊரகப் பகுதிகளுக்கான உள்ளாட்சி தோ்தலில் போட்டியிடுவதற்காக கடந்த 6 நாள்களாக வேட்பாளா்கள் வேட்பு மனு தாக்கல் செய்து வருகின்றனா்.
அதன்படி, அந்தநல்லூா், மணிகண்டம் உள்ளிட்ட 14 ஊராட்சி ஒன்றியங்களில் மாவட்ட ஊராட்சி வாா்டு உறுப்பினா் பதவிக்கு 18 போ், ஊராட்சி ஒன்றிய குழு உறுப்பினா் பதவிக்கு 234 போ், கிராம ஊராட்சி தலைவா் பதவிக்கு 361 போ், கிராம ஊராட்சி வாா்டு உறுப்பினா் பதவிக்கு 1,968 போ் என சனிக்கிழமை மட்டும் 2,581 போ் மனு தாக்கல் செய்துள்ளனா். கடந்த 6 நாள்களில் இதுவரை 7,520 போ் வேட்பு மனு தாக்கல் செய்திருப்பது குறிப்பிடத்தக்கது.