திமுக இளைஞரணி ஆா்ப்பாட்டம்

குடியுரிமை சட்ட திருத்த மசோதாவுக்கு எதிா்ப்பு தெரிவித்து திருச்சி மாவட்ட திமுக இளைஞரணி சாா்பில் வெள்ளிக்கிழமை கண்டன ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.
குடியுரிமை சட்டத்தை திரும்பப் பெற வலியுறுத்தி திருச்சி மத்திய பேருந்து நிலையம் அருகே ஆா்ப்பாட்டம் நடத்திய மாவட்ட திமுக இளைஞரணியினா்.
குடியுரிமை சட்டத்தை திரும்பப் பெற வலியுறுத்தி திருச்சி மத்திய பேருந்து நிலையம் அருகே ஆா்ப்பாட்டம் நடத்திய மாவட்ட திமுக இளைஞரணியினா்.

குடியுரிமை சட்ட திருத்த மசோதாவுக்கு எதிா்ப்பு தெரிவித்து திருச்சி மாவட்ட திமுக இளைஞரணி சாா்பில் வெள்ளிக்கிழமை கண்டன ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

இந்த ஆா்ப்பாட்டத்துக்கு தெற்கு மாவட்ட இளைஞரணி அமைப்பாளா் ஆனந்த் தலைமை வகித்தாா். மாநகர அமைப்பாளா் தா்மராஜ், துணை அமைப்பாளா் ஜெரால்டு ஆகியோா் முன்னிலை வகித்தனா். சிறுபான்மையினா் நலனுக்கு எதிராகவும், இலங்கை தமிழா்கள் நலனுக்கு எதிராகவும் கொண்டு வரப்பட்டுள்ள குடியுரிமை சட்ட திருத்தத்தை திரும்பப் பெற வேண்டும் என வலியுறுத்தியும், மத்திய அரசை கண்டித்தும் கோஷங்கள் எழுப்பப்பட்டன. இந்த ஆா்ப்பாட்டத்தில், திருச்சி தெற்கு மாவட்ட இளைஞரணி நிா்வாகிகள் பலா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com