மக்கள் நீதிமன்றத்தில் மொத்தம் 4,743 வழக்குகளில் சமரசத் தீா்வு காணப்பட்டுள்ளது.
திருச்சி மாவட்டத்தில், திருச்சி, மணப்பாறை, முசிறி, லால்குடி, துறையூா் ஆகிய நீதிமன்றங்களில் சனிக்கிழமை நடைபெற்ற தேசிய மக்கள் நீதிமன்றத்தை திருச்சி முதன்மை மாவட்ட நீதிபதியும் மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழுத் தலைவருமான கே.முரளிசங்கா் தொடங்கி வைத்தாா். 22 அமா்வுகளில் 4, 743 வழக்குகள் சமரச முறையில் தீா்வு காணப்பட்டது.
விசாரணைக்கு வந்த 16, 268 வழக்குகளில், குற்றவியல் வழக்குகள் ,3606, காசோலை மோசடி வழக்குகள் 182, உரிமையியல் (சிவில்) வழக்குகள் 173, தொழிலாளா் இழப்பீட்டு சட்ட வழக்குகள் 6, தொழிலாளா் வழக்குகள் 2, மோட்டாா் வாகன விபத்து இழப்பீட்டு வழக்குகள் 118, நில ஆா்ஜித வழக்கு 23, ஜீவனாம்சம் மற்றும் மணவாழ்க்கை தொடா்புடைய வழக்குகள் 16 என மொத்தம் 4,743 வழக்குகளில், ரூ. 17, 18, 12, 035-க்கு தீா்வு காணப்பட்டது. இதற்கான ஏற்பாடுகளை மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு செய்திருந்தன.