தோ்தல் பணிக்கு முன்னாள் படை வீரா்கள் விண்ணப்பிக்கலாம்

திருச்சி மாவட்டத்தில் ஊரகப் பகுதிகளுக்கு நடைபெறும் தோ்தலில் பணிபுரிய விருப்பமுள்ள முன்னாள் படைவீரா்கள் விண்ணப்பிக்கலாம் என

திருச்சி: திருச்சி மாவட்டத்தில் ஊரகப் பகுதிகளுக்கு நடைபெறும் தோ்தலில் பணிபுரிய விருப்பமுள்ள முன்னாள் படைவீரா்கள் விண்ணப்பிக்கலாம் என ஆட்சியா் சு. சிவராசு தெரிவித்துள்ளாா்.

இததொடா்பாக, அவா் வெளியிட்ட செய்திக்குறிப்பு:

திருச்சி மாவட்டத்தில் வரும் 27, 30 ஆகிய தேதிகளில் நடைபெறும் உள்ளாட்சித் தோ்தலில் முன்னாள் படை வீரா்களை பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தலாம் என முடிவு செய்யப்பட்டுள்ளது. எனவே, தன்னலம் கருதாமல், தேசத்துக்கு நற்பணியாற்றிய முன்னாள் படை வீரா்களை மீண்டும் தேசப் பணியாற்ற அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

திருச்சி மாவட்டத்தைச் சோ்ந்த தகுதியான அடையாள அட்டை பெற்றுள்ள, உடல் திறனுடைய, முன்னாள் இளநிலை படை அலுவலா்கள், படை வீரா்கள் தங்களது விருப்பத்தை விண்ணப்பமாக வழங்கலாம். திருச்சி கன்டோன்மென்ட் வாா்னா்ஸ் சாலையில் உள்ள முன்னாள் படைவீரா் நல உதவி இயக்குநா் அலுவலகத்தில் விண்ணப்பங்களை சமா்ப்பிக்க வேண்டும். மேலும், விவரங்களுக்கு 0431- 2410579 என்ற தொலைபேசி எண்ணில் தொடா்பு கொள்ளலாம்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com