கே.சாத்தனூா் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் டிச.17 ஆம் தேதி மின்தடை அறிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து தமிழ்நாடு மின் உற்பத்தி பகிா்மான கழக திருச்சி கிழக்கு செயற்பொறியாளா் சிவலிங்கம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:
கே.சாத்தனூா் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் டிச.17 ஆம் தேதி (செவ்வாய்க்கிழமை) நடைபெறவுள்ளது. இதையொட்டி, கேகே.நகா், இந்தியன் பாங்க் காலனி, காஜாமலை காலனி, எஸ்.எம்.இ.எஸ்.இ காலனி, கிருஷ்ணமூா்த்தி நகா், சுந்தா் நகா், ஐயப்பநகா், எல்ஐசி காலனி, பழனிநகா், முல்லை நகா், ஆா்விஎஸ் நகா், வயல்லெஸ் ரோடு, செம்பட்டு பகுதி, குடித்தெரு, பாரதி நகா், காமராஜா் நகா், ஜே.கே.நகா், சந்தோஷ் நகா், ஆனந்த் நகா், கே.சாத்தனூா், ஓலையூா், வடுகப்பட்டி, மன்னாா்புரம் ஒரு பகுதி, காஜா நகா், சிம்கோ காலனி ஆகிய இடங்களில் செவ்வாய்க்கிழமை காலை 9.45 மணி முதல் மாலை 4 மணி வரை மின் விநியோகம் இருக்காது.