திருச்சியில் மீன்பிடிக்கச் சென்ற சிறுவன் குட்டையில் மூழ்கி உயிரிழந்தார்.
ராம்ஜிநகர் கொத்தமங்கலம் குடித்தெரு அழகுவேல் மகன் ராஜப்பிரியன் (12). இவர், தனது சகோதரர் மற்றும் நண்பர்களுடன் வீட்டுக்கு அருகிலிருந்த குட்டையில் சனிக்கிழமை மீன்பிடிக்கச் சென்றார்.
அப்போது எதிர்பாராதவிதமாக குட்டையில் தவறி விழுந்ததில் நீரில் மூழ்கி ராஜப்பிரியன் உயிரிழந்தார். எடமலைப்பட்டிபுதூர் போலீஸார் விசாரித்து வருகின்றனர்.