டிராக்டர் திருடியவர்களை கைது செய்யாவிட்டால் முற்றுகை

டிராக்டர் திருட்டில் உரிய நடவடிக்கை எடுத்து, டிராக்டர் திருடர்களை உடனடியாகக் கைது செய்யாவிட்டால்

டிராக்டர் திருட்டில் உரிய நடவடிக்கை எடுத்து, டிராக்டர் திருடர்களை உடனடியாகக் கைது செய்யாவிட்டால் திருச்சி மாவட்ட எஸ்.பி அலுவலகத்தை முற்றுகையிடுவோம் என்றார் தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு சங்க திருச்சி மாவட்டத் தலைவர் கே.சி.பி. பொன்னுசாமி.
திருச்சி மாவட்டம், சிறுகனூர் காவல் எல்லைக்குட்பட்ட பகுதி வாழையூர் ஊராட்சியினைச் சேர்ந்த முத்துசாமி மகன் ரெங்கராஜ் (55). விவசாயி.  இவருக்குச் சொந்தமான ரூ. 8 லட்சம் மதிப்புள்ள டிராக்டர் ஜன. 6 ஆம் இரவு திருடுபோனதுகுறித்து சிறுகனூர் காவல்நிலையத்தில் புகார் அளித்தார்.  
திருடு போன டிராக்டர் மண்ணச்சநல்லூர் அருகேயுள்ள  திருவெள்ளரை பகுதியில் இருப்பதாக விவசாயி ரெங்கராஜ் செல்பேசி எண்ணிற்கு, ஜன. 8 ஆம் தேதி தகவல் வந்தது. இதையடுத்து, சிறுகனூர் போலீஸாருடன், ரெங்கராஜ் ஆகியோர் அங்கு சென்று டிராக்டரை மீட்டுவந்தனர். 
தொடர்ந்து, டிராக்டர் அவரிடம் ஒப்படைக்கப்பட்டது. இருப்பினும், டிராக்டர் திருட்டு தொடர்பான புகார் அளித்தும் இதுநாள்வரை ரசீது வழங்கப்படவில்லை. மேலும் டிராக்டர் திருடர்கள் குறித்து தகவல் அளித்தும் அவர்கள் மீது நடவடிக்கை ஏதும் இல்லை. 
எனவே, டிராக்டர் திருட்டில் தொடர்புடையவர்களை உடனடியாகக் கைது செய்யாவிட்டால் விரைவில் திருச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலத்தை முற்றுகையிடுவோம் என தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு சங்க திருச்சி மாவட்டத் தலைவர் கே.சி.பி. பொன்னுசாமி தெரிவித்துள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com