தந்தை  அடித்துக்கொலை: மகன் கைது

மதுபோதையில் தகராறு செய்த தந்தையை மகன் அடித்துக் கொன்ற சம்பவம் திருச்சியில்  பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மதுபோதையில் தகராறு செய்த தந்தையை மகன் அடித்துக் கொன்ற சம்பவம் திருச்சியில்  பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
திருச்சி மாவட்டம்,  திருவெறும்பூர் அருகிலுள்ள வேங்கூர் மாரியம்மன்  கோவில் தெருவைச் சேர்ந்தவர் குணசேகரன் (53). என்.ஐ.டி. வளாகத்தில் சமையலராகப் பணியாற்றி வந்தார். இவருக்கு மனைவி ரத்தினம், இரு மகன்கள், மகள் உள்ளனர்.
 மகன்கள் இருவரும் சமயபுரம் அருகே தாத்தா வீட்டில்  வசித்த நிலையில், குணசேகரன் தனது மனைவி,மகளுடன் இருந்து வந்தார்.
குணசேகரனுக்கு மது அருந்தும் பழக்கம் இருந்த நிலையில், மகளின் திருமணத்துக்காக சேர்த்து வைத்திருந்த பணத்தை எடுத்து செலவு செய்துவிட்டதாகக் கூறப்படுகிறது.
இதுதொடர்பாக திங்கள்கிழமை இரவு கணவரிடம் ரத்தினம் கேட்டபோது இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது.இதில்  மனைவியை குணசேகரன் தாக்கியுள்ளார்.
இதையடுத்து தனது மகன் சுதர்சனத்துக்கு (26) செல்லிடப்பேசி மூலமாக ரத்தினம் தகவல் தெரிவித்தாராம். இதன் பேரில் வேங்கூர் வீட்டுக்கு வந்த சுதர்சன், தாயைத் தாக்கியது குறித்து கேட்டாராம். இதனால் இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. 
அப்போது கத்தியால் குத்த வந்த தந்தை குணசேகரனை சுதர்சன் தள்ளிவிட்ட போது, சுவரில் மோதி கீழே விழுந்தததில்  அவர் மருத்துவமனையில் உயிரிழந்தார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com