கூம்பு வடிவ  ஒலி பெருக்கியை தடை செய்யக் கோரி மனு

திருச்சி மாவட்டத்தில் கூம்பு வடிவ ஒலி பெருக்கி பயன்பாட்டுக்கு தடை விதிக்கக் கோரி ஆட்சியரிடம் மக்கள் சக்தி இயக்கத்தின் சார்பில் கோரிக்கை மனு அளிக்கப்பட்டது.

திருச்சி மாவட்டத்தில் கூம்பு வடிவ ஒலி பெருக்கி பயன்பாட்டுக்கு தடை விதிக்கக் கோரி ஆட்சியரிடம் மக்கள் சக்தி இயக்கத்தின் சார்பில் கோரிக்கை மனு அளிக்கப்பட்டது.
இதுதொடர்பாக, மக்கள் சக்தி இயக்கத்தின் மாநில ஆலோசகர் கே.சி. நீலமேகம் அளித்துள்ள மனு: ஒலி மாசு ஏற்படுத்தும் வகையில் உள்ல கூம்பு வடிவ ஒலி பெருக்கிகளை பயன்படுத்தக் கூடாது என உயர்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டுள்ளது. எனவே, நீதிமன்ற உத்தரவைப் பின்பற்றி திருச்சி மாவட்டத்தில் கூம்பு வடிவ ஒலி பெருக்கிகளுக்கு தடை விதிக்க வேண்டும். 
மாவட்டத்தில் உள்ள அனைத்து வகை வழிபாட்டுத்தலங்களிலும் கூம்பு வடிவ ஒலி பெருக்கிகளே அதிகம் பயன்படுத்தப்படுகின்றன. எனவே, வழிபாட்டுத் தலங்களை நிர்வாகம் செய்யும் இந்து, முஸ்லிம், கிறிஸ்தவ நிர்வாகிகள் என முத்தரப்பையும் அழைத்து நீதிமன்ற உத்தரவு குறித்து விளக்கம் அளிக்க வேண்டும். கூம்பு வடிவ ஒலி பெருக்கிகளை அவர்களாகவே அகற்றிக் கொள்ள அறிவுறுத்த வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com