திருக்குறள் திருமூலநாதன் அறக்கட்டளை சார்பில் நடைபெறும் திருக்குறள் ஒப்புவித்தல் போட்டியில் பங்கேற்க விரும்பும் மாணவர், மாணவிகள் பதிவு செய்ய அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக, அறக்கட்டளை நிறுவனர் பி. தயாபரன் வெளியிட்ட அறிக்கை:
திருக்குறள் திருமூலநாதன் அறக்கட்டளை சார்பில், திருக்குறள் திருவிழா எனும் குறள் ஒப்புவித்தல் போட்டி 22ஆவது ஆண்டாக திருச்சியில் நடத்தப்படவுள்ளது. இதில், 17 அகவைக்குள்பட்ட மாணவர், மாணவிகள் அனைவரும் பங்கேற்கலாம். 1,330 குறள்களையும் ஒப்புவிக்கும் 30 பேருக்கு தலா ரூ.2 ஆயிரம், விருது வழங்கப்படும். முதல் 500 குறள்களை ஒப்புவிக்கும் 110 பேருக்கு தலா ரூ.500 பரிசு வழங்கப்படும். ஏற்கெனவே அறக்கட்டளை போட்டியில் விருது பெற்றவர்கள் மீண்டும் பங்கேற்க இயலாது.
விருப்பமுள்ள மாணவர்கள் தங்களது விவரங்களை ஏப்ரல் 15ஆம் தேதிக்குள் தபால் மூலமாக அனுப்பி பதிவு செய்ய வேண்டும். திருச்சி சேவா சங்கம் பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் மே மாதம் போட்டிகள் நடைபெறும்.
சுய விவரங்களை அனுப்ப வேண்டிய முகவரி: பி. தயாபரன், நிறுவனர், திருக்குறள் திருமூலநாதன் அறக்கட்டளை, புள்ளம்பாடி-621711. மேலும், விவரங்களுக்கு 97865-86992 என்ற செல்லிடபேசியிலும் தொடர்பு கொள்ளலாம்.