கோஷ்டி மோதலில் காயமடைந்த இளைஞர் சாவு

திருச்சியில் இருகோஷ்டிகளிடையே ஏற்பட்ட மோதலில் அரிவாளால் வெட்டப்பட்டு சிகிச்சை பெற்று வந்த இளைஞர் புதன்கிழமை உயிரிழந்தார்.

திருச்சியில் இருகோஷ்டிகளிடையே ஏற்பட்ட மோதலில் அரிவாளால் வெட்டப்பட்டு சிகிச்சை பெற்று வந்த இளைஞர் புதன்கிழமை உயிரிழந்தார்.
பாலக்கரை முதலியார்சத்திரம் மாரியம்மன் கோயில் தெருவை சேர்ந்த சிவக்குமார் மகன் அருண்குமார் தரப்பினருக்கும்,  அதே பகுதியைச் சேர்ந்த வினோத்குமார் தரப்பினருக்கும் இடையே செவ்வாய்க்கிழமை இரவு ஏற்பட்ட கோஷ்டி மோதலில் அருண்குமார்  அரிவாளால் வெட்டப்பட்டார். அதை தடுக்க வந்த அவருடைய நண்பர்  ஜாகீர் உசேனுக்கும் காயம் ஏற்பட்டது. இருவரும்  சிகிச்சைக்காக திருச்சி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். அங்கு சிகிச்சை பலனின்றி புதன்கிழமை காலை அருண்குமார் உயிரிழந்தார். ஜாகீர் உசேனுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. 
பாலக்கரை போலீஸார் வழக்குப் பதிவு செய்து  வினோத்குமார், கரிகாலன், சிவா, ரீகன் ஆகிய 4 பேரை கைது செய்தனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com