ரயிலில் அடிபட்டு முதியவர் சாவு

திருச்சி மாவட்டம், மணப்பாறை அடுத்த திண்டுக்கல் சாலை ரயில்வே மேம்பாலம் அருகே உள்ள பொன்னகரத்தை

திருச்சி மாவட்டம், மணப்பாறை அடுத்த திண்டுக்கல் சாலை ரயில்வே மேம்பாலம் அருகே உள்ள பொன்னகரத்தை சேர்ந்தவர் தமிழ்மணி (60).  இவர் இரவில் அடிக்கடி வீட்டை விட்டு வெளியே வந்து தெருக்களில் நடமாடுவாராம். 
வழக்கம்போல் வியாழக்கிழமை இரவு வீட்டில் உறங்கிக்கொண்டிருந்த தமிழ்மணியை விடியற்காலை காணாமல் தேடினர்.  இந்நிலையில் ரயில்வே மேம்பாலம் கீழ்பகுதியில் அவர்  ரயிலில் அடிபட்டு இறந்து கிடந்தது தெரியவந்தது.  மணப்பாறை ரயில்வே போலீஸார் சடலத்தை மீட்டு மணப்பாறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com