நெல்லை பைந்தமிழ் மன்றத்தின் சார்பில் ஸ்ரீரங்கத்தில் மாபெரும் இலக்கிய விழா சனிக்கிழமை நடைபெறுகிறது.
ஸ்ரீரங்கம் ராஜகோபுரம் அருகில் உள்ள ராகவேந்திரா திருமண மஹாலில் நடைபெறும் விழாவுக்கு பன்முகத் திறமையாளர் பிரேமா நந்தகுமார் தலைமை வகிக்கிறார்.
திருச்சி தமிழ்ச் சங்கத் தலைவர் ஐ. அரங்கராசன் வரவேற்புரையாற்றுகிறார். தேந்தமிழ் திவ்யப் பிரபந்தம் எனும் தலைப்பில் மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகப் பொதுச் செயலர் வைகோ சிறப்புரையாற்றுகிறார்.
இந்த விழாவில், இலக்கிய ஆர்வலர்கள், தமிழ் ஆர்வலர்கள், எழுத்தாளர்கள், பேச்சாளர்கள் என பலர் பங்கேற்கவுள்ளனர். இதற்கான ஏற்பாடுகளை நெல்லை பைந்தமிழ் மன்றத்தினர் செய்துள்ளனர்.